சேலத்தில் மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் கந்தம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இன்று காலை கறவை மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டபோது போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கந்தம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இன்று காலை திடீர் என்று தங்கள் கறவை மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகச் சொல்லியும் மறுத்துவிட்டனர். உடனே போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கலைந்து போகச் செய்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர். மாடுகள் சாலையோரமாக கட்டிவைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications