சட்டசபை தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி தனித்துப் போட்டி - பாரிவேந்தர் அறிவிப்பு
மதுரை : தமிழக சட்டசபை தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது என்று அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தமிழக சட்டசபை தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள இந்திய ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் பொதுத் தொகுதிக்கு ரூ. 2000 கட்டி விண்ணப்பம் பெற வேண்டும்.
அதே போல தனித்தொகுதிக்கு ரூ. 1000 செலுத்தி விண்ணப்ப படிவத்தினை நாளை முதல் சென்னை- அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமை நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப கடைசி நாள் பிப்ரவரி 25- ம் தேதி ஆகும்.
வரும் 26-ம் தேதி பெரம்பலூரில் நடைபெற உள்ள விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் வைத்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications