எம்பிபிஎஸ் சேர்க்கை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் நுழைவுத் தேர்வு இல்லை-அரசு உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படாது என்று சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

தமிழ்நாட்டில் மருத்துவ மற்றும் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வந்த நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந் நிலையில் நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்போவதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மத்திய அரசு இது குறித்து இறுதி முடிவு எடுக்காமல் இழுத்தடித்து வருகிறது.

இந் நிலையில் தமிழக சட்டசபையில் நேற்று இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இடைக்கால பட்ஜெட் மீதான பொதுவிவாதத்தின் மீது பேசிய அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. அந்த சட்டம் இதுவரை திரும்பப் பெறப்படவில்லை. இதில், தமிழக அரசின் நிலை என்ன என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, நிச்சயமாக தமிழகத்தில் நுழைவுத் தேர்வு வராது என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில்சிபலும் உறுதி அளித்திருக்கிறார். மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார். அதனால் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு இருக்காது என்றார்.

மீண்டும் சி.வி.சண்முகம் பேசுகையில், மத்திய அரசின் நுழைவுத் தேர்வு தொடர்பான சட்டத்தை திரும்பப் பெற ஏன் தமிழக அரசு வற்புறுத்தவில்லை? என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், நுழைவுத் தேர்வு தொடர்பாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்ற முறையில் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் நான் கலந்து கொண்டேன். மாநில அரசை கலந்து பேசாமல் எந்த முடிவையும் எடுக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் உறுதி அளித்துள்ளார். நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே ஓட்டுக்காக, தேர்தலுக்காக சி.வி.சண்முகம் பொய் பிரசாரம் செய்ய வேண்டாம்.

தவறாகப் பேசாமல் நிதானமாகப் பேசுங்கள். பென்னாகரம் தொகுதியில் டெபாசிட் இழந்தவர்கள் (அதிமுக) இப்போது ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+