திருப்பூர் சாய ஆலைகள் விவகாரம் : இன்று திருப்பூரில் அதிமுக உண்ணாவிரதம்
சென்னை: திருப்பூர் சாயப்பட்டறை பிரச்சனையை தீர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று திருப்பூரில் அதிமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
திருப்பூர் சாய, சலவை ஆலைகளின் கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலக்காமல் தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது. அதனால் தான் அனைத்து ஆலைகளையும் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி திருப்பூரில் உள்ள 700-க்கும் மேற்பட்ட ஆலைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு வேலபார்த்து வந்த லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். மேலும், நாள் ஒன்றுக்கு ரூ. 5 கோடி உற்பத்தி இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆலைகளை நம்பி இருக்கும் பின்னலாடை தொழிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு பின்னலாடைத் தொழிலும் முடங்கும் பட்சத்தில் தினமும் ரூ. 50 கோடி அளவுக்கு வர்த்தக இழப்பும், அந்நியச் செலாவணி இழப்பும் ஏற்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே, இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி இன்று (11-ம் தேதி) அதிமுக சார்பில் திருப்பூர் நகர ரயில் நிலையம் முன்பு அமைந்துள்ள குமரன் சிலை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். இதற்கு கழக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் தலைமை தாங்குவார். மாவட்டக் கழகச் செயலாளர் சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் செ.ம.வேலுச்சாமி எம்எல்ஏ திருப்பூர் தொகுதி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருப்பூர் சி.சிவசாமி, பொள்ளாச்சி தொகுதி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுகுமார், அவினாசி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆர். பிரேமா மற்றும் திருப்பூர் நகரக் கழகச் செயலாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்!












Click it and Unblock the Notifications