பதவி விலக மறுக்கும் முபாரக்: நாட்டை விட்டு வெளியேறினார் ?

Subscribe to Oneindia Tamil

கெய்ரோ: எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் தனது பதவியில் இருந்து உடனடியாக விலக மறுத்துவிட்டார். அவர் செப்டம்பர் மாதம் தான் விலகுவேன் என்று தெரிவித்துள்ளார்.

எகிப்தில் கடந்த 30 ஆண்டு காலமாக ஹோஸ்னி முபாரக் தான் அதிபராக சர்வாதிகாரம் செலுத்தி வருகிறார். இதை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதி்த்துள்ளனர். அவரை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடே போராட்ட பூமியாக மாறியுள்ளது. போராட்டக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க முயன்ற முபாரக் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

இந் நிலையில் ராணுவம் ஆட்சியைப் பிடிக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தக்ரிர் சதுக்கத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களிடையே பேசிய மூத்த ராணுவ கமாண்டர் ஜெனரல் ஹாசன் அல்-ரோயினி, அதிபர் முபாரக் மக்கள் கோரிக்கையை ஏற்று பதவி விலகி நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சியை நாங்கள் கைப்பற்றுவோம் என்று மிரட்டல் விடுத்தார். நாடும், எம்மக்களின் நலனும்தான் முக்கியம் என மக்களின் கோரிக்கையை அவர் ஏற்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தை விட்டு விலக வேண்டும். இன்று இரவுடன் மக்கள் பிரச்சனை முடிவுக்கு வரும் என்றார்.

இந் நிலையிலி இரவில் அரசு
தொலைக்காட்சி உரையாற்றிய முபாரக், நான் வெளிநாட்டவர்கள் சொல்வதை கேட்க மாட்டேன். அடுத்த தேர்தல் வரை எகிப்தியர்களின் நலனைப் பாதுகாப்பதிலும், அரசியலமைப்பை காப்பாற்றுவதிலும் எனக்குள்ள பொறுப்பில் நான் உறுதியாக இருப்பேன் என்றார்.

இந்த பேட்டிக்குக் பிறகு முபாரக் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+