தூத்துக்குடி-கொழும்பு தோணி போக்குவரத்து துவங்கியது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு 3 ஆண்டுகளுக்கு பி்ன்னர் தோணி மூலம் சரக்கு போக்குவரத்து இன்று தொடங்கியது.
தூத்துக்குடியில் இருந்து காய்கறிகள், உப்பு , நாட்டு மருந்துகள், வத்தல், பூண்டு, உருளைக்கிழங்கு, கருவாடு, பீடி, இலைகள் உள்ளிட்ட பொருட்கள் தோணிகள் மூலம் கொழும்பு, மாலத்தீவு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தன. இதுபோல அங்குள்ள பழைய இரும்பு பொருட்கள் தூத்துக்குடிக்கு தோணி மூலம் கொண்டு வரப்பட்டன.
தற்போது மாலதீவுக்கு மட்டும் தூத்துக்குடியில் இருந்து இருமாதங்களுக்கு ஒரு முறை 40க்கும் மேற்பட்ட தோணிகளில் சரக்கு ஏற்றி செல்லப்படுகிறது. ஆனால் தற்போது வெரும் 6 தோணிகளில் மட்டுமே சரக்கு போக்குவரத்து நடக்கிறது.
சரக்கு கப்பல்கள் மூலம் இலங்கைக்கு சரக்குகள் அனுப்பப்பட்டதாலும், இலங்கையில் நிலவிய போர் சூழல் மற்றும் அங்குள்ள அரசின் நிலைப்பாடு ஆகிய காரணங்களால் இலங்கைக்கு தோணிகளில் சரக்குகள் கொண்டு செல்லப்படுவது படிப்படியாக குறைந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் தோணி தொழிலை நம்பியிருந்த பல குடும்பங்கள் நலிவுற்றன.
இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி- கொழும்பு இடையே தோணி மூலம் சரக்குக்கள் அனுப்பும் பணிகள் இன்று காலை தொடங்கியது. மஞ்சள், புளி, வத்தல் போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டு எம்எஸவி ராஜ் என்ற தோணி கொழும்புவுக்கு புறப்பட்டு சென்றது.
தூத்துக்குடியில் இருந்து புறப்படும் தோணி 20 முதல் 22 மணி நேரத்திற்குள் கொழும்பு சென்றடையும் எனவும், இந்த தோணி போக்குவரத்து வாரம் ஒருமுறை நடைபெறும் என்றும் தோணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications