சிவ சேனா தலையீடில்லாமல் மும்பையில் காதலர் தினக் கொண்டாட்டம் : காதலர்கள் மகிழ்ச்சி

இளம் ஆண்களும், பெண்களும் தங்களுக்கு பிடித்த உடை அணிந்து உணவகத்திற்கு சென்று ஜோடியாக விருந்து உண்கின்றனர். சினிமேக்ஸ் மல்டிபிளக்ஸ், கன்டிவாலியில் உள்ள மால், அந்தேரி சிட்டி சென்டர் இளம் ஜோடிகளால் நிரம்பிக் காணப்படுகிறது.
மும்பையில் அனைத்து பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. இந்நிலையில் காதலர் தினம் மட்டும் ஏன் கொண்டாடக்கூடாது என்கிறார் சுவர்ணா என்னும் கல்லூரி மாணவி.
காதலர் தினம் மேற்கத்திய கலாச்சாரம். அதை நம் நாட்டவர்கள் கொண்டாடக் கூடாது என்று சிவசேனா கூறியது. கடந்த ஆண்டுகளில் காதலர் தினத்தன்று காதலர்கள் தாக்கப்படுவதும், பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகள் சேதப்படுத்துவதும் நடந்தன. ஆனால் இந்த ஆண்டு சிவ சேனா இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. காரணம் வரும் பிஎம்சி(மும்பை முனிசிபாலிட்டி) தேர்தலில் இளம் வாக்காளர்களின் வாக்குகளை சேகரிக்கத் தான்.
பால் தாக்கரேயின் பேரன் ஆதித்யா தாக்கரே இளைஞர் அணித் தலைவராக உள்ளார். சிவசேனா தற்போது மும்பை மாநகராட்சித் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு வாக்குகளை சேமிப்பதில் மும்முரம் காட்டுவதால் காதலர் தினத்தில் ஆர்வம் காட்டவில்லை. சிவ சேனா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சட்டசபை தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் தோல்வி அடைந்தது. தற்போது மீண்டும் தோல்வியைத் தழுவ விரும்பவில்லை.












Click it and Unblock the Notifications