Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரிசா கலெக்டரை மாவோயிஸ்ட்கள் கடத்தல் : சிறையில் இருக்கும் கூட்டாளிகளை விடுவிக்க நிபந்தனை

Subscribe to Oneindia Tamil

புவனேஷ்வர்: மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள மால்காங்கிரி மாவட்ட ஆட்சியரை மாவோயிஸ்ட்கள் கடத்தியுள்ளனர். அவர்கள் மத்திய படையை திரும்பப் பெற வேண்டும என்றும், கைது செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்ட்களை விடுவிக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் வைத்துள்ளனர்.

மால்காங்கிரி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. கிருஷ்ணாவையும்(30), ஜூனியர் பொறியாளர் ஒருவரையும் நேற்று மாலையில் இருந்து காணவில்லை. அவர்கள் சித்ரகோண்டா பகுதியில் நடக்கும் உள்ளுர் முன்னேற்ற முகாமை பார்வையிடச் சென்றபோது மாயமாகியுள்ளனர் என்று எஸ்பி அனிருத் சிங் தெரிவித்தார்.

ஆந்திர பிரதேச மாநில எல்லையோரம் உள்ள பாடபடா முகாமில் இருந்து மாவட்ட ஆட்சியர் 2 ஜூனியர் பொறியாளர்கள் மற்றும் இன்னொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள பாலம் ஒன்றை பார்க்க புறப்பட்டார் என்று சித்ரகோண்டா தாசில்தார் டி. கோபால் கிருஷ்ணன் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

மாவட்ட ஆட்சியரும், ஒரு ஜூனியர் பொறியாளரும் மாயமாகிவிட்டனர். ஆனால் அவர்களுடன் சென்றிருந்த மற்ற இருவர் நேற்று நள்ளிரவில் பாடபடா முகாமிற்கு திரும்பினர். அவர்கள் கடிதம் ஒன்றை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதனை மாவோயிஸ்ட்கள் எழுதியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் இருந்து மத்திய படையை திரும்பப் பெறவேண்டும் என்றும், நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள போராளிகளை விடுவிக்க வேண்டும் என்று அதில் எழுதியிருந்தது. நாங்கள் அந்த கடிதத்தை ஆய்வு செய்து, நிலைமை குறித்து ஆலோசித்து வருகிறோம். அவரைக் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

மாவட்ட ஆட்சியரை மாவோயிஸ்ட்கள் தான் பணயக்கைதியாக பிடித்துக் கொண்டு போயிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம் என்று எஸ்பி சிங் தெரிவித்தார்.

இகு குறித்து டெல்லியில் உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை தெரிவித்ததாவது,

மாவோயிஸ்ட்கள் கிருஷ்ணாவை கடத்தி அவர்கள் நிபந்தனைகளை ஒரு கடிதத்தில் எழுதிக் கொடுத்துள்ளனர். மாநில அரசும் மற்ற அதிகாரிகளும் இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த செயல் கண்டனத்திற்குரியது. கிருஷ்ணாவை காப்பாற்ற எந்த ஆப்ரேஷனும் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். அவருக்கு உள்ளூரில் உள்ள ஆதரவும், மாநில அரசும் அவரை விடுவிக்கும் எனறு நான் நம்புகிறேன்.

அவரை விடுவிக்க ஒரு சில நாட்கள் ஆகும். ஆனால் உறுதியாக அவரை மீட்டுவிடுவோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+