கிராமப்புற பயன்பாட்டு வாகனங்களுக்கு வரிச்சலுகை:மத்திய அரசு பரிசீலனை

ஊரகப் பகுதிகளில் குறிப்பிட்ட சில வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.மேலும்.அந்த வாகனங்களே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.ஆனால்,அவை அதிக கலால் வரி கொண்ட பிரிவில் உள்ளன.
இந்த வாகனங்களுக்கு,சொகுசு கார்களுக்கு விதிக்கப்படும் அளவுக்கு 22 சதவீத கலால் வரி விதிக்கப்படுகிறது.எனவே,ஊரகப் பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், ஊரகப்பகுதிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட வாகனங்களுக்கு வரிச்சலுகை வழங்குவது குறித்து மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.இதுதொடர்பாக,மத்திய நிதி அமைச்சகத்திடமும் தனது கருத்தை கனரக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"ஊரகப் பகுதிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கும்,பிஎம்டபிள்யூ X1 மற்றும் செவரோலெட் கேப்டிவா உள்ளிட்ட சொகுசு கார்களுக்கும் சரிசமமாக 22சதவீத கலால் வரி விதிக்கப்படுகிறது.
எனவே,கிராமங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு டிராக்டர்கள் மற்றும் விவசாய கருவிகளுக்கு வழங்குவது போன்று வரிச்சலுகை வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்.
தற்போது எந்தெந்த வாகனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசி்த்து வருகிறோம்.பட்ஜெட்டில் சலுகை அறிவிக்கப்பட்டால்,விவசாயிகள் உள்பட ஊரக மக்கள் அோேதிகம் பயன்பெற முடியும்,"என்று கூறினார்.












Click it and Unblock the Notifications