மீண்டும் 'கரெக்ஷன்' வர வாய்ப்பு... முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை!

இந்தத் தடுமாற்றம் இன்னும் பல மாதங்களுக்குத் தொடரும் என எச்சரித்துள்ளன பங்குத் தரகு நிறுவனங்கள். குறிப்பாக ஜூலை வரையிலான காலகட்டத்தில் சென்செக்ஸ் மேலும் வீழ்ச்சியடைந்து 16000 புள்ளிகளைத் தொட வாய்ப்புள்ளதாம். சமயத்தில் இது 20000 புள்ளிகளாக உயரவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து மும்பையில் பங்கு வர்த்தக மையமும் ஏஞ்சல் புரோக்கிங்கும் இணைந்து நடத்தி ஒரு கருத்தரங்கிலும் இதுகுறித்து பேசப்பட்டது. ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் ராஜன் ஷா கூறுகையில், "பங்குச் சந்தை இன்னும் சில மாதங்களுக்கு எதிர்மறையாகத்தான் இருக்கும். பெரிய கரெக்ஷனுக்கும் வாய்ப்புள்ளது. 16000 முதல் 20000 புள்ளிகளுக்கு மத்தியில் சென்செக்ஸ் ஊசலாடும் நிலை உள்ளது. எனவே முதலீட்டுக்கான வாய்ப்புகளை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்", என்றார்.
"அதே நேரம், பங்குகள் விலை வீழ்ச்சியடையும் போது வாங்கப்படும் நல்ல பங்குகள் ஒரு போதும் பலனிக்காமல் போனதில்லை. இதையும் முதலீட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டும்" என்றார் ஏஞ்சல் புரோக்கிங் நிர்வாக இயக்குநர் தினேஷ் தக்கர்.












Click it and Unblock the Notifications