அதிமுகவிடம் 18 தொகுதிகள் கேட்கும் சிபிஎம், 15 கேட்கும் சிபிஐ
சென்னை: அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் மனித நேய மக்கள் கட்சியினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக தேர்தல் பணிக் குழுவினரோடு பேச்சு நடத்தி வருகின்றனர்.
நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினருடன் அதிமுக தேர்தல் பங்கீட்டுக் குழுவைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பேச்சு நடத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஜி. ராமகிருஷ்ணன், டி.கே. ரங்கராஜன், கே. பாலகிருஷ்ணன் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இதையடுத்து நிருபர்களிடம் அவர்கள் பேசுகையில், விரைவில் தொகுதிகள் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றனர்.
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற இந்தக் கட்சி 13 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வென்றது. இம்முறை இந்தக் கட்சி 18 தொகுதிகள் கேட்கிறது.
இதையடுத்து மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் அதன் நிர்வாகிகள் ஹைதர் அலி, ஜவாகிருல்லா ஆகியோர் நேற்று மாலை அதிமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் பணிக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், துணை செயலாளர் மகேந்திரன், கோ.பழனிச்சாமி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 10 இடங்களில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவர்களுக்கு திமுக ஒரு ராஜ்ய சபா சீட்டும் வழங்கியது.
இந்தத் தேர்தலில் அந்தக் கட்சி 15 தொகுதிகள் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் இதுவரை சிறிய கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அதிலும் கூடுதல் இடங்கள் கேட்டு பிரச்சனையை ஆரம்பித்துவிட்டது புதிய தமிழகம்.
அதே நேரத்தில் விஜய்காந்தின் தேமுதிகவுடனும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுள்ளன. அந்கக் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு இறுதியாகும் வரை மதிமுகவுக்கும், இடதுசாரிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்குவதை அதிமுக ஒத்தி்ப் போட்டு வருவதாகத் தெரிகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications