அதிமுக கூட்டணியில் 10 தொகுதிகள் வேண்டும்! - கார்த்திக்

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பரங்குன்றம் அருகே உள்ள கீழக்குயில்குடியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கட்சியின் நிறுவனரும், நடிகருமான கார்த்திக் தலைமை இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்தார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அகில இந்திய நாடாளும் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த நடிகர் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 175 தொகுதிகள் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளன. அந்த தொகுதி மக்களுக்கு இலவச மருத்துவமனைகள், சாலை வசதிகள், சுகாதார வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இந்தியாவில் உள்ள பெரிய பணக்காரர்களின் பணமெல்லாம் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணமாக உள்ளது.
அந்த பணத்தை மீட்டு, அதில் ஒரு பகுதியை 234 தொகுதிகளிலும் உள்ள ஏழை- எளிய மக்களுக்கு கொடுத்து 100 சதவீதம் அடிப்படை வசதிகளை நிறைவேற்றலாம். இதனால் தமிழகத்தில் ஏழை- எளிய மக்கள் இல்லை என்ற நிலை ஏற்படும். ஏழைகள் வரி கட்ட வேண்டிய நிலை இருக்காது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நல்லவர். வயதில் முதியவர். மதிக்கத்தக்க கூடியவர். ஆனால் மக்கள் குறைகளை நிறைவேற்றுவதில் வல்லவராக அவர் இல்லை.
மத்தியில் அவர் கூட்டணி தர்மத்தைதான் பார்க்கிறார். மக்கள் கடமை செய்வதில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
கூட்டணி பேச்சுவார்த்தை முடியவில்லை...
அ.தி.மு.க.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு எனக்கு அழைப்பு விடுத்தனர். நானும் சென்று அவர்களுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினேன்.
அப்போது அவர்கள் தங்களுடன் பா.ம.க.வருவதால், உங்களுக்கு அதிக எண்ணிக்கையில் சீட்டு தர முடியாது எனவே குறிப்பிட்ட தொகுதியை தருவதாக கூறினர். ஆனால் தற்போது தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துவிட்டது பாமக. ஆகவே தென் மாவட்டங்களில் எங்கள் கட்சிக்கு முக்கியத்துவம் அளித்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்.
நான் நியாயத்தைதான் கேட்கிறேன். அதிகமாகக் கேட்கவில்லை. அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முழுமை பெறவில்லை. முதல்கட்ட பேச்சுவார்த்தைதான் நடந்து உள்ளது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிதான் ஆட்சிக்கு வரும். மக்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்..", என்றார்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் கார்த்திகை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் முத்துராமலிங்கம், துணை செயலாளர் அய்யப்பன், பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications