சென்னையில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் திடீர் மழை
சென்னை: சென்னையில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில், திடீரென மழை பெய்ததால் மக்கள் குழப்பமடைந்தனர். அத்தோடு புழுக்கமும் அதிகமாகிப் போனது.
தமிழகத்தில் தற்போது பெரும்பாலான பகுதிகளில் பனி குறைந்து விட்டது. சென்னையில் சுத்தமாக நின்று விட்டது. இது கோடை காலத் தொடக்கத்திற்கான அறிகுறியாகத் தெரிகிறது. பகல் முழுவதும் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. மாலைக்கு மேல் வெயில் குறைந்தாலும், புழுக்கம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2-3 நாட்களாக புழுக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மழை வருமோ என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவியது.
இந்த நிலையில் இன்று பகலில் திடீரென கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இது சில இடங்களில் பெரிய மழையாக இருந்தது. அதேசமயம், பல இடங்களில் பெரிய மழையாக இல்லாமல் ஆங்காங்கே விட்டு விட்டு சாறல் போல இருந்ததால் மக்கள் குழப்பமடைந்தனர்.
வானத்தைப் பார்த்தால் வெயில் வெளுத்துக் கொண்டிருக்க, கீழே மழைத் துளிகள் விழுந்தது பார்க்கவே படு வித்தியாசமாக இருந்தது.
இருந்தாலும் இந்த மழை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சில நிமிடத் துளிகளே தூறி வி்ட்டுப் போய் விட்டது இந்த திடீர் மழை.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications