நானும் ஒரு ரவுடிதான்-அஜீத் பவார் பரபரப்பு பேச்சு
Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டம் தஸ்கான் நகரில் புறநகர் கூட்டுறவு வங்கி விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் அஜித்பவார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், அரசியல் என்பது கடுமையான விளையாட்டு போன்றது. கடும் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும், அரசியலில் எதையும் சாதிக்க வேண்டுமெனில் சில போக்கிரித்தனம் செய்ய வேண்டும். அதற்கு நான் ஒரு உதாரணம், ஏனென்றால் நான் ஒரு அரசியல் போக்கிரி.
ரவுடியாக இல்லாவிட்டால் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது என்றார் பவார். அவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்தான் பத்திரிக்கையாளர்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசி வம்பில் சிக்கினார் அஜீத் பவார். இந்த நிலையில் தற்போது நானும் ஒரு ரவுடிதான் என்று வடிவேலு கணக்கில் பேசி சர்ச்சையில் மாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications