சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்-கலெக்டர்களுடன் 26-ம் தேதி ஆலோசனை
நெல்லை: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படும் சூழ்நிலையி்ல் வரும் 26-ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படூம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சில் முழு வீ்ச்சாக இருக்க, தேர்தலை சிறப்பாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலில் ஓட்டு போட முக்கிய ஆவணமாக கருதப்படும் வாக்காளர் அடையாள அட்டை நகல் வழங்க அனைத்து பகுதிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலை அமைதியாக நடத்துவது தொடர்பாக அனைத்து அரசி்யல் கட்சிகளுடன் ஆலோசனையும் நடந்துள்ளது.
ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓதுக்கீடு செய்யப்பட்டு இதுகுறித்து ஆய்வு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் சென்னையில் வரும் 26-ம் தேதி ஆலோசனை நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள், ஓட்டுச் சாவடிகள் விபரம், எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு, வாக்காளர் அடையாள அட்டை பணிகள் உள்பட பல்வேறு தகவல்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications