ஜேபிசியில் எல்லா கட்சிகளுக்கும் இடம்: அதிமுக கோரிக்கை
டெல்லி: 2ஜி விவகாரம் குறித்து விசாரணை நடத்த அமைக்கவிருக்கும் கூட்டுக் குழுவில் அனைத்து கட்சிகளும் இருக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்படும் என்று நேற்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். கூட்டுக குழு விசாரணை மட்டும் தான் வேண்டும் என்று இருந்த எதிர்கட்சிகள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்தன.
ஆனால் அந்தக் குழுவில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் இருக்கமாட்டார்கள் என்று தெரிகிறது. இதையடுத்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூட்டுக்குழுவில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
பாராளுமன்றத்தில் மொத்தம் 31 கட்சி பிரதிநிதிகள் இருக்கின்றனர். இதில் 21 பேர் மட்டுமே கூட்டுக் குழுவில் நியமிக்க காங்கிரஸ் திட்டமிட்டிரு்பபதாக கூறப்படுகிறது. 30 பேரையாவது கூட்டுக்குழுவில் நியமிக்க வேண்டும் என்று பாஜக கூறி வருகிறது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி. தம்பிதுரை பேசியதாவது,
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே சொன்னவர் ஜெயலலிதா தான். அதனால் கூட்டுக்குழுவில் அனைத்துக் கட்சிகளும் இருக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் இது தொடர்பான தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது. இரு சபைகளிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகே கூட்டுக்குழு அமைக்கப்படும்.












Click it and Unblock the Notifications