தேங்காய் ஏற்றுமதி: இலங்கையின் நஷ்டம் இந்தியாவுக்கு லாபம்!

இலங்கையில் தேங்காய் உற்பத்தி படுவீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் உள்ளூர் தேங்காய் விலை மிகவும் அதிகரித்துவிட்டது. எனவே உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்த பிறகே, தேங்காய் ஏற்றுமதி குறித்து முடிவு செய்யப்படும் என்று இலங்கை அறிவித்துவிட்டது.
தேங்காய் ஏற்றுமதியில் உலகிலேயே முன்னணியிலிருப்பவை இந்தியாவும் இலங்கையும்தான். உலக நாடுகள் பலவும் இங்கிருந்துதான் தேங்காயைப் பெறுகின்றன. இலங்கையிலிருந்து தேங்காய் ஏற்றுமதியே இல்லை என்றாகிவிட்டதால், இந்தியாவின் தேங்காய்க்கு எக்கச்சக்க கிராக்கி.
எனவே இந்த ஆண்டு மட்டும் 30 சதவீத அளவு தேங்காய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கும், மொரீஷியஸுக்கும் மட்டும் வழக்கமாக ஏற்றுமதி செய்யும் அளவை விட 50 சதவீதம் கூடுதலாக அனுப்பியுள்ளதாக தேங்காய் வளர்ச்சி வாரியம் அறிவித்துள்ளது.
உலகில் 86 நாடுகளில் தேங்காய் பயிராகிறது. ஆண்டுக்கு 54 பில்லியன் தேங்காய்கள் உற்பத்தியாகின்றன. இவற்றில் 13 பில்லியன் தேங்காய் இந்தியாவிலிருந்துதான் கிடைக்கிறது. குறிப்பாக தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகம்தான் அதிக தேங்காய்களை உற்பத்தி செய்கின்றன.












Click it and Unblock the Notifications