ரங்கசாமி கட்சியில் சேர்ந்த புதுச்சேரி பாமக எம்.எல்.ஏ.
புதுச்சேரி: புதுச்சேரி பாமக நியமன எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சியில் இருந்து விலகி அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி, சமீபத்தில் தனது சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்தார். இவரைத் தொடர்ந்து கொறடா அங்காளனும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
தனது தொண்டர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப ரங்கசாமி, அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார். இந்த கட்சியில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் என பல கட்சிகளில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் வந்து சேர்ந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நியமன எம்.எல்.ஏ-வான பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்பு அவர் தன்னை அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
பாமக நியமன எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துள்ள சம்பவம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications