பாமகவுக்கு கிடைத்துள்ள அங்கீகாரத்தைப் போல விடுதலைச் சிறுத்தைகளும் பெற வேண்டும்-திருமாவளவன்

மதுரை அருகே விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், நடந்த விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு திருமாவளவன் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,
ஒரு கட்சியின் கட்டுப்பாட்டை மதிப்பது, அந்த கட்சியின் தலைமை கோட்பாடு, கொள்கைகளை மதிப்பது போன்ற மனப் பக்குவத்தை தொண்டர்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.
பா.ம.க. தலைவர் ராமதாஸ் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவித்தாலும் அதே போல அக்கட்சியின் தொண்டர்கள் தலைவரின் ஆணையை மதித்து செயல்படுகிறார்கள். இந்த முறை சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பா.ம.க. 31 தொகுதிகளை பெற்றுள்ளது. இது அக்கட்சிக்கு கிடைத்த அரசியல் அங்கீகாரமாகும்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தலித் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு சிதறிக்கிடந்த தலித் சமுதாயத்தை ஒன்று திரட்டி அவர்களுக்கு அரசியல் அங்கீகாரத்தை பெற்றுத் தருவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
தலித் சமுதாயம் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இணைந்து கலைஞரை மீண்டும் முதல் அமைச்சர் பதவியில் அமர வைக்க பாடுபடுவோம். நாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்கும். குறிப்பாக தென் மாவட்டங்களில் போட்டியிடுவதற்கான தொகுதிகளை கேட்டுள்ளோம் என்றார் திருமாவளவன்.
'2க்கு மேல் எப்போதும் வேண்டாம்':
முன்னதாக நேற்று திருவண்ணாமலையில் நடந்த திமுக இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் பேசுகையில், 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பது பொன்மொழி. அந்த சிறப்பான வாழ்வை, திமுக தலைவர் கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தருவார் என்று நம்புகிறேன் என்று பேசினார்.
அவர் 16 என்று கூறியது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திமுகவிடமிருந்து எதிர்பார்க்கும் சீட்டைத்தான். இதற்கு கருணாநிதி பேசுகையில் தனது பாணியில் பதிலளித்தார். அவர் கூறுகையில், 16 பெற்றால் பெருவாழ்வு என்பதை ரவிக்குமார் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்.
இப்போதெல்லாம் ஒன்றுக்கு மேல் ஒன்றும் வேண்டாம், இரண்டுக்கு மேல் வேண்டவே வேண்டாம் என்றுதான் கூறுகிறார்கள் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications