சட்டசபைத் தேர்தல்-சீட் கேட்போரின் விருப்ப மனு தாக்கல் தொடங்கியது
சென்னை திமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு தாக்கல் இன்று தொடங்கியது. மார்ச் 7ம் தேதி வரை மனுக்களைத் தரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெறும் பணியை அக்கட்சி முடித்து விட்டது. கூட்டணியும் கிட்டத்தட்ட இறுதியாகி விட்டது. தொகுதிப் பங்கீடும் முடிவுக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் தற்போது திமுக தனது கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக உள்ளது.
இந்தப் பின்னணியில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்களைப் பெறும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று காலை இந்த மனு தாக்கல் தொடங்கியது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு விட்டனர்.
முதல்வர் கருணாநிதி சார்பிலும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பிலும் ஏராளமானோர் போட்டி போட்டு மனுக்களைக் கொடுத்தனர்.
மார்ச் 7ம் தேதி வரை மனுக்களைக் கொடுக்கலாம். மனுவின் விலை ரூ. 500 ஆகும்.












Click it and Unblock the Notifications