நாடாளுமன்ற விவாதத்தின் போது மயங்கி விழுந்த எம்.பி.- அவை 15 நிமிடம் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்றத்தில் விவாத நேரத்தின்போது எம்.பி. பிரசாந்தா குமார் மஜபும்தார் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங் பதிலளித்துக் கொண்டிருக்கையில் புரட்சிகர சோசலிச கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசாந்தா குமார் மஜபும்தார் உடல் நலக்குறைவால் தனது இருக்கையில் இருந்து திடீர் என்று மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார். அமைச்சர் ஒருவர் மயங்கி விழுந்ததால் நாடாளுமன்றம் 15 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications