கிளிநொச்சியில் தமிழரின் 1500 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த ராஜபக்சே குடும்பம்!
Subscribe to Oneindia Tamil

அத்துடன், ராஜபட்சவுக்கு நெருக்கமானவர்கள் சிலர் சுமார் 1000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சியில் மொத்தம் 2500 ஏக்கருக்கு மேல் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் அனைத்தும், போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது.
இதனிடையே, தங்கள் சொந்த இடத்துக்கு திரும்பி வரும் தமிழர்களுக்கு, காட்டுப் பகுதிகளில் மாற்று இடம் வழங்கி அங்கே குடியேறுமாறு கட்டாயப்படுத்துகிறதாம் சிங்கள ராணுவம்.
அமைச்சர் பசில் ராஜபக்சே உத்தரவின் பேரில் தமிழர்களின் நிலம் ஆக்கிமிக்கப்படுவதாகவும், அதற்கு மாற்றாக வேறு இடங்களில் இடம் வழங்கப்படுவதாகவும் தமிழர் தரப்பில் புகார் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications