Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்பெக்ட்ரம் ஊழல்-திமுக அரசை உடனே டிஸ்மிஸ் செய்யுங்கள்-விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதி மாநில அரசின் முதல்வராக இருப்பதனாலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கின்ற முக்கிய கட்சியின் தலைவராக இருப்பதனாலும், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில், முறையான விசாரணை நடைபெறாமல் இடையூறுகள் நேர்வதற்கும், உண்மையை மூடி மறைப்பதற்கும், ஊழல் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் வழி வகைகள் ஏற்படும். எனவே, முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவரது அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணையில், ஊழல் பணம் கலைஞர் டி.விக்கு முதலீடாக வந்துள்ளது என்பதும், பின்னர் கலைஞர் டி.வி. அந்தப் பணத்தை கடனாகக் கருதி திரும்ப தந்திருக்கிறது என்பதும் உண்மை விவரங்களாக வெளி வந்துள்ளன.

மேலும் சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்டெல் கம்பெனி இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனமாகும். அந்த நிறுவனத்தின் பணமும் கலைஞர் டி.விக்கு வந்துள்ளது என்று தெரிகிறது.

எவ்வாறு மத்திய அமைச்சர் பதவியில் இருந்தால் விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் என்று, முன்னாள் அமைச்சர் ராஜா விலக வேண்டும் என்று நாடாளுமன்றமே வற்புறுத்தியதன் பேரில் அவர் விலக நேர்ந்ததோ,

அதே போல கருணாநிதி மாநில அரசின் முதல்வராக இருப்பதனாலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கின்ற முக்கிய கட்சியின் தலைவராக இருப்பதனாலும், முறையான விசாரணை நடைபெறாமல் இடையூறுகள் நேர்வதற்கும், உண்மையை மூடி மறைப்பதற்கும், ஊழல் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் வழி வகைகள் ஏற்படும். எனவே, முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்.

சி.பி.ஐ. விசாரணை முறையாக நடைபெறவும், எவ்வித குறுக்கீடும் இல்லாமல் இருப்பதற்கும் இதுவே வழி வகுக்கும். அவர் பதவி விலக மறுத்தால் நீதியை நிலைநாட்ட மத்திய அரசு தி.மு.க. அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

இல்லையென்றால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் இந்த ஊழலுக்கு உடந்தை என்றே மக்கள் கருதுவர். தேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களே இருப்பதனால் எத்தகைய உள்நோக்கத்தோடும் இதை நான் கூறவில்லை.

இன்னும் சொல்லப் போனால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டதால் எந்த நிர்வாகச் சிக்கலும் இல்லை. ஆகவே இந்த அரசு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. மேலும் தேர்தல்கள் அமைதியாகவும், நேர்மையாகவும் தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கு தேர்தல் கமிஷனுக்கும் இது உகந்ததாக இருக்கும்.

தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்வதன் மூலம் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும் என்றே கருதுகிறேன். தி.மு.க. அரசு கடந்த காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களில் கடைப்பிடித்த அராஜகங்களையும், பின்னர் இடைத் தேர்தல்களில் கையாண்ட ஊழல் போக்குகளையும் அறிந்துள்ள மக்கள் நிச்சயம் இதை வரவேற்பார்கள். ஆகவே, உடனடியாக தி.மு.க. அரசை பதவி நீக்கம் செய்து நேர்மையான தேர்தல்கள் நடைபெற மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+