For Quick Alerts
For Daily Alerts
Just In
தீப்பெட்டி தொழிற்சாலையில் தீவிபத்து-6 பெண்கள் உள்பட 10 பேர் காயம்
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் தனியார் தீப்பெட்டித் தொழிற்சாலை உள்ளது. இங்கு தீப்பெட்டித் தயாரிப்பில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இதில் சிக்கி 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 6 பேர் பெண்கள் ஆவர். தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் விரைந்து வந்தனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
Comments
English summary
10 workers including 6 women are injured in match factory fire mishap near Sathur, in Viruthunagar district. Fire brigades and police personnel have rushed to the place. Details are awaited.
Story first published: Wednesday, March 2, 2011, 13:24 [IST]