கூட்டணி முறியாது என நம்புகிறோம்! - குலாம் நபி ஆசாத்

திமுக கூட்டணியில் 63 தொகுதிகள் வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது காங்கிரஸ் கட்சி. இதனால் திமுக கூட்டணியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவாதிக்க திமுகவின் உயர்நிலைக் குழு இன்று கூடி விவாதித்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான குலாம் நபி ஆசாத் இன்று மாலை இதுகுறித்துக் கூறுகையில், கூட்டணியை திமுக முறித்துக் கொள்ளாது என நம்புகிறேன். காங்கிரஸ் 63 தொகுதிகள் கேட்டதில் எந்தத் தவறுமில்லை. கூட்டணி என்று வரும்போது இதெல்லாம் சகஜம்தான்.
ஆனால் இதெல்லாம் பேசி முடிவு செய்யப்பட்டுவிடும். விரைவில் இதுகுறித்து இறுதி அறிவிப்பு வெளியாகும், என்றார்.
திமுக உயர்நிலைக குழுக் கூட்டம் குறித்து கேட்கப்பட்ட போது, கூட்டணியைப் பாதிக்கும் எந்த முடிவும் அவர்களும் எடுக்கமாட்டார்கள் என நம்புவதாக ஆசாத் கூறினார்.
இன்று வருவார்?
இதற்கிடையே கூட்டணி குறித்து இறுதி செய்யவும், தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் குலாம் நபி ஆசாத் இன்று சென்னை வருவார் என்று கூறப்பட்டது.
ஆனால் அவர் இன்று வரமாட்டார் என்றுமந், நாளை வரக்கூடும் என்றும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications