For Daily Alerts
Just In
தேமுதிக நேர்காணல் 11ல் தொடங்கி 3 நாள் நடைபெறுகிறது
சென்னை: தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பி மனு செய்துள்ளவர்களுக்கு 3 நாட்கள் நேர்காணல் நடைபெறவுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்து சட்டசபைத் தேர்தலை சந்திக்கிறது விஜயகாந்த்தின் தேமுதிக. இதையடுத்து சீட் கேட்டு ஆயிரக்கணக்கில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களிடம் திமுக பாணியில் நேர்காணல் நடத்தி சீட் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது கட்சித் தலைமை. இதற்கான நேர்காணல் வருகிற 11ம் தேதி தொடங்குகிறது. 13ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும்.
மாவட்ட வாரியாக நேர்காணலுக்கு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
நேர்காணலுக்கு வருவோர், விருப்ப மனு தாக்கல் செய்தது தொடர்பான ரசீதை கண்டிப்பாக உடன் கொண்டு வரவேண்டும் என கட்சி அறிவுறுத்தியுள்ளது.
Comments
English summary
DMDK has announced the dates for seat seekers interview. The interview will begin on March 11, and will end on March 13. Seat seekers have been asked to attend the interview with the receipt given by party. Vijayakanth led team will conduct the interview.
Story first published: Tuesday, March 8, 2011, 13:06 [IST]