புதுவை... அதிமுகவுடன் கைகோர்க்கிறார் ரங்கசாமி?

தமிழகம் மற்றும் புதுவை சட்டமன்ற தேர்தல்களில் திமுகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
அதிமுக - தேமுதிக மற்றும் மதிமுக உள்ளிட்டவை தனி அணியாகக் களம் காணுகின்றன.
காங்கிரஸிலிருந்து விலகி, புதிதாக என் ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ள அம்மாநில முன்னாள் முதல்வர் என் ரங்கசாமி, இம்முறை அதிமுகவுடன் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.
ரங்கசாமி தனிக்கட்சி ஆரம்பித்ததுமே அ.தி.மு.க. நிர்வாகிகள் அவரை சந்தித்து கூட்டணி அமைக்கவும், முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிக்கவும் சம்மதம் தெரிவித்தனர்.
தற்போது என்.ஆர். காங்கிரஸ் கட்சி பெயருக்கான அங்கீகாரத்தை பெறும் முயற்சியில் ரங்கசாமி தீவிரமாக உள்ளார். இதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அனேகமாக இன்றுமாலை என்.ஆர். காங்கிரஸ் கட்சி பெயருக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்று தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விரைவில் ரங்கசாமி சந்திக்கிறார். அப்போது என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் புதுவையில் கூட்டணி அமைவது உறுதிப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
கூட்டணியில் அதிக அளவிலான தொகுதிகளை என்.ஆர்.காங்கிரசுக்கு அதி.மு.க. அணி விட்டுக் கொடுக்கும் என்றும் மீதமுள்ள தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் போட்டியிடும் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications