எல்லை மீறி மீன் பிடிக்க வந்த 26 இந்திய மீனவர்களை கைது செய்த பாக்.
இஸ்லாமாபாத்: எல்லைத் தாண்டிய குற்றத்திற்காக பாகிஸ்தான் அதிகாரிகள் 26 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர்.
இது குறித்து மாரிடைம் செக்யூரிட்டி ஏஜென்சியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,
நேற்றிரவு எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் 6 படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கராச்சி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றார்.
இந்தியாவும், பாகிஸ்தானும் ஒவ்வொரு ஆண்டும் எல்லை மீறும் குற்றத்திற்காக ஏராளமான மீனவர்களை கைது செய்து வருகின்றன. இதில் வேதனை என்னவென்றால் கைது செய்யப்படுபவர்களில் பலர் தங்கள் தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் வாடுகின்றனர்.
அன்மையில் இஸ்லாமாபாத் 12 இந்திய கைதிகளை விடுவித்தது. இதில் 11 பேர் மீனவர்கள். அவர்கள் தண்டனைக் காலம் முடந்தும் கடந்த 3 ஆண்டுகளாக கராச்சி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications