குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தங்கியிருந்த இடம் அருகே குண்டுவெடிப்பு
Subscribe to Oneindia Tamil
இம்பால் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தங்கியிருந்த இடத்திற்கு அருகே சக்தி வாய்ந்த குண்டுவெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதீபா பாட்டீல் மணிப்பூர் வந்துள்ளார். இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு அவர் தங்கினார். அப்போது இரவு 11 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு அருகே ஆனந்தசிங் அகாடமி என்ற இடத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு மணிப்பூர் தீவிரவாதிகளே காரணம் என்பது தெரிய வந்தது. இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
பிரதீபா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் மக்கள் விடுதலை முன்னணி அமைப்பு, 40 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தப் பின்னணியில்தான் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பிரதீபாவுக்கான பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications