சென்னையில் கடும் பனி மூட்டம்: விமானங்கள், ரயில் சேவை பாதிப்பு!

தமிழகத்தில் பருவநிலை மாற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாற்றங்களுக்குள்ளாகி உள்ளது. கடந்த வாரம் சென்னையில் வெயில் அதிக அளவில் வாட்டத்தொடங்கியது. நேற்று முன்தினம் சென்னையில் வெயில் அளவு 100 டிகிரியைத் தொட்டது.
பொதுவாகவே மார்ச் மாதமானால் கோடையும் தொடங்கிவிடும்.
ஆனால் நேற்று காலை பருவநிலை நிலை திடீரென மாறியது. அதிகாலையில் இருந்தே கடுமையான மூடு பனி காணப்பட்டது. இதனால் சாலைகளில் முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு தடுமாறினர் வாகன ஓட்டிகள்.
சென்னை மட்டுமின்றி, ஊத்துக்கோட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பூந்தமல்லி போன்ற இடங்களிலும் இதே நிலை நீடித்தது.
ஊத்துக்கோட்டையில் காலை 8 மணி வரை வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் ஊர்ந்து சென்றன. சாலையில் நடந்து சென்றவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
விமானங்கள் தாமதம்:
பனி மூட்டம் காரணமாக சென்னையில் இருந்து நேற்று காலையில் புறப்பட வேண்டிய 5 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. டெல்லிக்கு காலை 6-40 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 7 மணிக்கு புறப்பட்டு சென்றது.
காலை 6-30 மணிக்கு செல்ல வேண்டிய கோவை விமானம் 6-45 மணிக்கு புறப்பட்டது. அது போல மும்பை, ஐதராபாத், கொச்சி செல்ல வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.
ரெயில்கள் ஊர்ந்து சென்றன:
ரெயில் பாதையில் பனி மூட்டம் காரணமாக சரியாக சிக்னல் தெரியவில்லை. எனவே, செங்கல்பட்டு-தாம்பரம்-கடற்கரைக்கு செல்லும் புறநகர் ரெயில்கள், காலை 4 மணி முதலே மெதுவாக சென்றன. சென்னைக்கு அதிகாலையில் வந்து சேரும் நீண்ட தூர ரெயில்களும் தாமதமாகவே வந்து சேர்ந்தன. காலை 7 மணிக்கு பின்தான் ஓரளவு நிலைமை சீரடைந்தது.
உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் எதிரொலிதான் இது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications