சென்னையில் கடும் பனி மூட்டம்: விமானங்கள், ரயில் சேவை பாதிப்பு!

தமிழகத்தில் பருவநிலை மாற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாற்றங்களுக்குள்ளாகி உள்ளது. கடந்த வாரம் சென்னையில் வெயில் அதிக அளவில் வாட்டத்தொடங்கியது. நேற்று முன்தினம் சென்னையில் வெயில் அளவு 100 டிகிரியைத் தொட்டது.
பொதுவாகவே மார்ச் மாதமானால் கோடையும் தொடங்கிவிடும்.
ஆனால் நேற்று காலை பருவநிலை நிலை திடீரென மாறியது. அதிகாலையில் இருந்தே கடுமையான மூடு பனி காணப்பட்டது. இதனால் சாலைகளில் முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு தடுமாறினர் வாகன ஓட்டிகள்.
சென்னை மட்டுமின்றி, ஊத்துக்கோட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பூந்தமல்லி போன்ற இடங்களிலும் இதே நிலை நீடித்தது.
ஊத்துக்கோட்டையில் காலை 8 மணி வரை வாகனங்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் ஊர்ந்து சென்றன. சாலையில் நடந்து சென்றவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
விமானங்கள் தாமதம்:
பனி மூட்டம் காரணமாக சென்னையில் இருந்து நேற்று காலையில் புறப்பட வேண்டிய 5 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. டெல்லிக்கு காலை 6-40 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 7 மணிக்கு புறப்பட்டு சென்றது.
காலை 6-30 மணிக்கு செல்ல வேண்டிய கோவை விமானம் 6-45 மணிக்கு புறப்பட்டது. அது போல மும்பை, ஐதராபாத், கொச்சி செல்ல வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.
ரெயில்கள் ஊர்ந்து சென்றன:
ரெயில் பாதையில் பனி மூட்டம் காரணமாக சரியாக சிக்னல் தெரியவில்லை. எனவே, செங்கல்பட்டு-தாம்பரம்-கடற்கரைக்கு செல்லும் புறநகர் ரெயில்கள், காலை 4 மணி முதலே மெதுவாக சென்றன. சென்னைக்கு அதிகாலையில் வந்து சேரும் நீண்ட தூர ரெயில்களும் தாமதமாகவே வந்து சேர்ந்தன. காலை 7 மணிக்கு பின்தான் ஓரளவு நிலைமை சீரடைந்தது.
உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் எதிரொலிதான் இது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம்












Click it and Unblock the Notifications