சட்டசபைத் தேர்தல்-திமுக, தேமுதிகவில் விறுவிறு நேர்காணல்
Subscribe to Oneindia Tamil
சென்னை : திமுக மற்றும் தேமுதிக அலுவலங்களில் இன்று வேட்பாளர் நேர்காணல் விறுவிறுப்பாக நடந்தது.
திமுகவில் கடந்த 5 நாட்களாக மாவட்டவாரியாக நேர்காணல் நடந்து வருகிறது. இன்று 6வது நாளாக நேர்காணல் தொடர்ந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நேர்காணல் நடந்தது.
இதில் வேட்பாளராக விரும்பி மனு செய்திருந்தவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். கருணாநிதி தவிர மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
3வது நாளாக தேமுதிகவில் நேர்காணல்
தேமுதிக கட்சி அலுவலகத்தில் இன்று 3வது நாளாக நேர்காணல் நடந்தது. இதில் கன்னியாகுமரி உள்பட 12 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நேர்காணல் நடந்தது. இன்றுடன் தேமுதிகவில் நேர்காணல் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications