இந்தியாவுக்கு உதவிய ஜப்பான் நிறுவனம் சுனாமியில் நாசம்!
சுல்தான்பூர்: ஜப்பானில் ஏற்பட்டுள்ள சுனாமி பேரழிவு ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செய்ல்) தொழிற்சாலையைப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார் ம்ததிய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா.
ஜப்பானின் கோபோ ஸ்டீல் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் செய்ல் நிறுவனத்தின் தொழிற்சாலை சுல்தான்பூரில் அமைக்கப்பட்டுள்ளது. எரிவாயுவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் முதல் செய்ல் தொழிற்சாலை இது. மதிப்பு ரூ 5000 கோடி.
இந்த தொழிற்சாலைக்கு உதவிய கோபோ ஸ்டீல் நிறுவனம் இப்போது அடியோடு நாசமாகியுள்ளது, ஜப்பான் சுனாமியில்.
இதனால் செய்ல் நிறுவனத்தின் பணிகள் தாமதமாகியுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய உருக்குத் துறை இணை அமைச்சர் பெனி பிரசாத் வர்மா, "துரதிருஷ்டவசமாக இப்படியொரு நிலை ஏற்பட்டுவிட்டது. ஜப்பான் சுனாமி, செயிலையும் பாதித்துவிட்டது. கோபோ ஸ்டீல் பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளது சுனாமியால். எனவே அதுவரை செயிலின் புதிய தொழிற்சாலைப் பணிகள் நிறுத்தப்படுகின்றன. விரைவில் நிலைமை சரியாகும் என்று நம்புவோம்", என்றார்.












Click it and Unblock the Notifications