தேர்தல் தொடர்பான ரெய்டுகள்-தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.15 கோடி பறிமுதல்

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தவறாக பயன்படுத்தி, போலியாக ஊழியர்களின் பெயர்களை சேர்த்து, மக்களுக்கு பண வினியோகம் நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுகாவில் உள்ள அகரம் ஆலம்பாடி ஊராட்சியில், இது போன்ற முறைகேடு நடந்துள்ளது. ஊராட்சித் தலைவர் சங்கரை கைது செய்ய, மாவட்ட கலெக்டர், வாரன்ட் பிறப்பித்துள்ளார்.இது தெரிந்ததும், தலைவர் தலைமறைவாகியுள்ளார். அவரை, தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற முறைகேடுகள் வேறு எங்கும் நடக்காத அளவிற்கு கண்காணிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பத்தாயிரம் வாக்குச் சாவடிகளில், கேமரா பொருத்தப்பட உள்ளது. இது தொடர்பாக, வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், அரசியல் கட்சியினர் சில தகவல்களை பரப்பி வருவதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக புகார்கள் வந்தால், கடும் நடவடிக்கை எடுப்போம்.
வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கு ஓட்டு போடுகின்றனர் என்பதை, கேமரா மூலம் கண்டுபிடித்து விட முடியும் என்று கூறி, தங்களது கட்சிக்குத் தான் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. உண்மையில், வாக்காளர் எந்தக் கட்சியின் சின்னத்தில் ஓட்டை பதிவு செய்கிறார் என்ற விவரம் மட்டும், கேமராவில் பதிவாகாது. அந்த கோணத்தில் தான், கேமராக்களை பொருத்துவோம். எனவே, வாக்காளர்கள் எந்தவித பயமும் இன்றி, தாங்கள் விரும்பிய வேட்பாளர்களுக்கு ஓட்டு போடலாம்.
தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து, இதுவரை 15 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 11ம் தேதியன்று, மதுரை மாவட்டத்தில் நான்கு கார்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு காரில் 89 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், மற்றொரு காரில் 1 கோடியே 6 லட்சம் ரூபாய், மூன்றாவது காரில் 55 லட்சம் ரூபாய், நான்காவது காரில் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளனர்.அப்படியிருந்தாலும், ஆவணங்கள் இருக்க வேண்டும். மேலும், வங்கிப் பணம் என்றால், வாகனத்துடன் பாதுகாவலர்கள் செல்வர். அதுபோல், ஆவணங்களோ, பாதுகாவலர்களோ இல்லை. ஈரோட்டில், ஒரு காரில் 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மத்திய அமைச்சர் அழகிரி மீதான புகார் குறித்து, தேர்தல் கமிஷனுக்கு அவர் பதில் அனுப்பியுள்ளார். அதைப் பற்றிய விவரம் எங்களுக்குத் தெரியாது. மற்றவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில், தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தலில் வாக்காளர்களை கவனிக்க, பல்வேறு யுக்திகளை அரசியல் கட்சிகள் கையாண்டு வருகின்றன. பல இடங்களில், பல்வேறு பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து வரும் நிலையில், திருக்கோவிலூரில் நேற்று முன்தினம் ஒரு காரில் 24 லட்சம் ரூபாயையும், ஒரு வாகனத்தில் மூன்று லட்சம் எண்ணிக்கையிலான பீடி பண்டல்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பீடி குடிப்பவர்களை குஷிப்படுத்த, பீடிகள் எடுத்துச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது என்றார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications