திமுகவிடம் ஒரு சீட் வாங்கிய ஸ்ரீதர் வாண்டையார் கட்சியில் பிளவு
திருச்சி: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது. தன்னிச்சையாக முடிவெடுத்து விட்டார் ஸ்ரீதர் என்று கட்சியின் பொதுச் செயலாளர் ராமசுப்பிரமணிய காடுவெட்டியார் தலைமையில் நடந்த கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஜெயலலிதா பக்கம் இருந்தார் ஸ்ரீதர். தற்போது அவர் திமுக கூட்டணிக்கு வந்துள்ளார். அவருக்கு ஒரு சீட்டைக் கொடுத்துள்ளது திமுக. உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடவுள்ளார்.
இந்த நிலையில் அவரது கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. இக்கட்சியின் பொதுச் செயலாளர் ராமசுப்பிரமணிய காடுவெட்டியார் தலைமையில் திருச்சியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
அப்போது தன்னிச்சையாக செயல்படும் ஸ்ரீதர் வாண்டையாருக்குக் கணட்னம் தெரிவிக்கப்பட்டது. இன்னும் 2 நாட்களில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே சீட் பிரச்சினை காரணமாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியிலும் பிரச்சினை நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications