வைகோவை சந்திக்கும் திட்டமில்லை: கருணாநிதி
சென்னை: தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகே திமுக பிரசாரத்தில் ஈடுபடும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்றிரவு அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
நிருபர்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உங்களை சந்திக்கவிருப்பதாக செய்திகள் வருகின்றனவே?
கருணாநிதி: அப்படி ஒன்றும் நடக்காது.
நிருபர்: கம்யூனிஸ்ட் கட்சி தொகுதிகளில் அதிமுக போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளதே?
கருணாநிதி: நான் அடுத்த வீட்டையோ, எதிர் வீட்டையோ எட்டிப்பார்ப்பது இல்லை.
நிருபர்: தேர்தல் பிரசாரத்தை எப்பொழுது தொடங்குவீர்கள்?
கருணாநிதி: தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகே திமுக பிரசாரத்தில் ஈடுபடும்.
நிருபர்: சென்னையில் உள்ள பெரும்பாலான தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கே விட்டுக் கொடுத்திருக்கிறீர்களே?
கருணாநிதி: எண்ணிப் பாருங்கள்.
நிருபர்: சட்டசபை தேர்தலில் திமுக குறைந்த தொகுதிகளிலேயே போட்டியிடுகிறதே?
கருணாநிதி: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இவ்வாறு முதல்வர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.