பெங்களூர் பல்கலையில் இன்டர்நெட் குறித்த 2 நாள் கருத்தரங்கம் துவக்கம்
பெங்களூர்: புதிய ஊடகங்கள் குறித்த கருத்தரங்கு பெங்களூர் பல்கலைக்கழகத்தில் இன்று துவங்கியது. இந்த கருத்தரங்கு நாளையும் நடைபெறுகிறது.
பெங்களூர் பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத்துறை புதிய ஊடகங்கள் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் இன்றைய உலகில் பத்திரிக்கைத் துறையின் தேவை, புதிய ஊடகங்கள் குறிப்பாக உலக தகவல் தொடர்புத்துறையில் இன்டர்நெட்டின் தாக்கம் குறித்து பேசப்படுகிறது.
இன்று தவங்கிய கருத்தரங்கில் பிரபல பத்திரிக்கையாளரும், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் பக்கம் ஆலோசகருமான பத்மபூஷன் டிஜேஎஸ் ஜார்ஜ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
பத்திரிக்கைத் துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அது பற்றி கற்பிப்பது என்பது தண்ணீருக்குள் இறஙகாமலே நீச்சல் கற்றுக் கொள்வது போன்றாகும்.
ஊடகங்கள் பற்றி கற்பிக்கும் ஆசிரியர்கள் அன்றாடம் பத்திரிக்கையாளர்கள் சந்திக்கும் சவால்களை கருத்தில் கொண்டு பாடம் நடத்த வேண்டும். திறமையும், ஆர்வும் தான் பத்திரிக்கைத் துறைக்கு அவசியம் என்றார்.
இந்த கருத்தரங்கில் ஊடக அமைப்புகளைச் சேர்ந்த பல பிரபலங்கள் தங்கள் பத்திரிக்கை வாழ்க்கை அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
இன்றைய கருத்தரங்கில் ஜீ டிவியின் துணை தலைவர் கௌதம் மச்சையா மற்றும் ஒன்இந்தியா நிறுவன தலைமை செயலதிகாரி பி.ஜி.மகேஷ் ஆகியோர் தங்கள் அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இதில் அச்சு மற்றும் தொலைக்காட்சியை மீடியாவை புதிய ஊடகமான இன்டர்நெட் எவ்வாறு பாதித்துள்ளது என்றும் பேசப்பட்டது.
இந்தியாவில் இன்டர்நெட் பயணம் துவங்கிய சூழ்நிலை குறித்து பி.ஜி. மகேஷ் பேசினார். அவர் கூறுகையில், இன்டர்நெட் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்தியாவில் பிரதான இடத்தைப் பெற முடியவில்லை. . லப்போக்கில் இன்டர்நெட் இந்தியாவில் குறிப்பாக தகவல் தொடர்புத்துறையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் எடுத்துரைத்தார்.












Click it and Unblock the Notifications