ஓரிரு நாளில் காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தங்கபாலு அறிவிப்பு
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. காங்கிரஸுக்கு திமுக 63 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இது குறித்து தங்கபாலு கூறியதாவது,
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும். கட்சி சார்பில் போட்டியிட 2 ஆயிரத்து 160 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
அவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும். அங்குள்ள காங்கிரஸ் தலைமை மனுக்களை பரிசீலித்து வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications