For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டணி அமளிகளுக்கு மத்தியில் நாளை வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதேபோல புதுச்சேரி, கேரளா சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலும் நாளையே தொடங்குகிறது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 19ம் தேதி (நாளை) முதல் 26ந் தேதி வரை தொகுதி தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும்.

20ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் அன்றைய தினம் வேட்பு மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. வேட்பு மனு பற்றிய அறிவிப்பினை சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகள் 19ம் தேதி (நாளை) வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அட்டவணை:

வேட்பு மனு தாக்கல் தொடக்கம்- மார்ச் 19
வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்- மார்ச் 26
வேட்பு மனுக்கள் பரிசீலனை- மார்ச் 28
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்- மார்ச் 30
வாக்குப் பதிவு- ஏப்ரல் 13
வாக்கு எண்ணிக்கை- மே 13

கட்டுப்பாடுகள்:

வேட்பு மனு தாக்கல் மற்றும் பிரசாரம் தொடர்பாக ஏராளமான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

அவை பின்வருமாறு:

- வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வரக்கூடாது.

- மனு தாக்கல் செய்யும் அறையில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சுயேட்சை வேட்பாளர் என்றால் பெயரை முன்மொழிய 10 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளரின் கல்வித்தகுதி, சொத்து விவரம், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

English summary
Filing of nomination papers for TN assembly polls begin tomorrow. Last date for nomination is March 26. Nomination papers will be taken for scrutiny on March 28. Last date for withdrawal is March 30. Polling will be held on April 13 and counting will take place on May 13.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X