ஆற்காடு வீராசாமிக்கு சீட் இல்லை-அவரது பி.ஏ.வுக்கு நன்னிலத்தில் சீட்
சென்னை: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு இந்த முறை சீட் வழங்காத திமுக தலைமை அவரது பி.ஏ.வான இளங்கோவனு்ககு நன்னிலம் தொகுதியில் போட்டி சீட் வழங்கியுள்ளது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருப்பவர் ஆற்காடு வீராசாமி. இவரது பி.ஏ.வாக இருப்பவர் இளங்கோவன். இவர் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு மிகவும் நெருக்கமான உறவினராவார். இவரது சொந்த ஊர் நன்னிலமாகும்.
இவர் விளையாட்டுத்துறை கோட்டாவில் மின்சார வாரியத்தில் ஏ.ஏ.வாக பணியில் சேர்ந்தவர். பின்னர் 2006 ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியிடம் பி.ஏ.வாக நியமிக்கப்பட்டார்.
இவருக்காக மத்திய அமைச்சர் மு.க. அழகிரி திமுக தலைமையிடம் பேசி சீட் வாங்கிக் கொடுத்தாக கூறப்படுகின்றது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வீராசாமியின் பி.ஏ.வுக்கு சீட் கிடைத்துள்ளது.