மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு!
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை நேற்று மத்திய அமைச்சரவை வழங்கியது.
இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 38 லட்சம் பென்ஷன்தாரர்கள் பலனடைவார்கள். இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ 1500 கோடி கூடுதல் செலவாகும். ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த அகவிலைப் படி உயர்வு கணக்கிடப்படும்.
நாட்டில் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் உயர்வு மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு 45 சதவீதத்திலிருந்து 51 சதவீதமாக இந்த அகவிலைப்படி உயர்ந்துள்ளது. மேலும் மத்திய அரசுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்விப் படியையும் 25 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதுதவிர சிறப்புப் படியையும் 25 சதவீதம் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
ஜம்மு - காஷ்மீர் பகுதியில் பணிமாற்றம் செய்யப்படும் மத்திய அரசு ஊழியர்களுக்கான சிறப்புப் படியும் 25 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications