டாக்டர் சேதுராமனின் கட்சியை இரண்டாக 'பிளந்த' அழகிரி!
மதுரை: அதிமுக கூட்டணியில் உள்ள டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம் இரண்டாக உடைந்தது. புதிய மூவேந்தர் முன்னணி கழகம் என்ற தனிக்கட்சி உருவாகியுள்ளது.
மூவேந்தர் முன்னணி கழகத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திருச்சுழி தொகுதியை ஒதுக்கியுள்ளார். அங்கு இசக்கி முத்து என்பவர் போட்டியிடுவார் என்று சேதுராமன் அறிவித்துள்ளார்.
இந் நிலையில் அக் கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளர் ஒச்சாத் தேவர் கட்சியை உடைத்து புதிய மூவேந்தர் முன்னணி கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார்.
இதையடுத்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்த ஒச்சாத் தேவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கும். திமுகவை ஆதரித்து நாங்கள் பிரச்சாரம் செய்வோம் என்றார்.
கட்சியை உடைத்ததே அழகிரி தான் என்று சேதுராமன் தரப்பு புகார் கூறுகிறது.












Click it and Unblock the Notifications