For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஷிவந்தியத்தில் போட்டியிடும் விஜயகாந்த் நாளை வேட்பு மனு தாக்கல்

Google Oneindia Tamil News

சென்னை: ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

கடந்த முறை கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் போட்டியிட்டார் விஜயகாந்த். அவரது கட்சியினர் தமிழகம் முழுவதும் போட்டியிட்டாலும், அவர் மட்டுமே வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் தற்போதைய தேர்தலில் அவர் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்பு மனுவை அவர் நாளை தாக்கல் செய்கிறார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குச் சென்று அங்கு தனது வேட்பு மனுவை விஜயகாந்த் தாக்கல் செய்கிறார். அதன் பின்னர் தனது தேர்தல் பிரசாரத்தை அவர் தொடங்குகிறார்.

விஜயகாந்த்துடன் மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் உள்ளிட்டோர் உடன் செல்கின்றனர்.

English summary
DMDK leader Vijayakanth will file nomination for Rishivandhiyam by tomorrow. He will submit his papers in Villupuram collectorate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X