ரிஷிவந்தியத்தில் போட்டி-விஜயகாந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார்
விழுப்புரம்: ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
கடந்த தேர்தலில் விருத்தாச்சலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயகாந்த் இந்த முறை தொகுதி மாறி விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை இன்று அவர் தாக்கல் செய்தார்.
இதற்காக தனது மனைவி பிரேமலதாவுடன் விழுப்புரம் கிளம்பி வந்தார் விஜயகாந்த். அவருக்கு விக்கிரவாண்டியில் தேமுதிகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து விழுப்புரம் வரை வழியெங்கும் விஜயகாந்த்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திலும் பெரும் திரளான தேமுதிகவினர் திரண்டு வந்திருந்தனர்.
பின்னர் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்தார் விஜயகாந்த்.
2வது முறையாக போட்டி:
விஜயகாந்த் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது இது 2வது முறையாகும். கடந்த 2006ம் ஆண்டு அவர் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.












Click it and Unblock the Notifications