சட்டசபை தேர்தல்: அன்பழகன் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்
மதுரை: திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி வரும் 30-ம் தேதி கோவையிலும், 31-ம் தேதி ஈரோட்டிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதனால் அதைச் சுற்றியுள்ள தொகுதிகளில், நான் (அன்பழகன்) அறிவித்திருந்த சுற்றுப்பயணத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு,
மார்ச் 29-ம்- தேதி கீரனூர், அன்னவாசல், புதுக்கோட்டை
மார்ச் 30-ம்- தேதி அரவக்குறிச்சி, வேடசந்தூர், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி
மார்ச் 31-ம்- தேதி தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை, கிணத்துக்கடவு
ஏப்ரல் 1-ம்- தேதி கோவை (தெற்கு), கவுண்டம்பாளையம், கோவை (வடக்கு)
ஏர்பல் 2-ம்- தேதி மேட்டுப்பாளையம், அவினாசி, திருப்பூர் (தெற்கு), திருப்பூர் (வடக்கு)
மார்ச் 3-ம்- தேதி கிருஷ்ணராயபுரம், குளித்தலை, முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர்
ஏப்ரல் 4-ம்- தேதி லால்குடி, திருவரங்கம், திருவரம்பூர், திருச்சி ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளேன்.
எனவே, அந்தஅந்த மாவட்ட செயலாளர்களும், வேட்பாளர்களும் அதற்கேற்ப எனது கூட்ட நிகழ்ச்சியை அமைத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.