சட்டசபை தேர்தல்: அன்பழகன் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்
மதுரை: திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி வரும் 30-ம் தேதி கோவையிலும், 31-ம் தேதி ஈரோட்டிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதனால் அதைச் சுற்றியுள்ள தொகுதிகளில், நான் (அன்பழகன்) அறிவித்திருந்த சுற்றுப்பயணத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு,
மார்ச் 29-ம்- தேதி கீரனூர், அன்னவாசல், புதுக்கோட்டை
மார்ச் 30-ம்- தேதி அரவக்குறிச்சி, வேடசந்தூர், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி
மார்ச் 31-ம்- தேதி தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை, கிணத்துக்கடவு
ஏப்ரல் 1-ம்- தேதி கோவை (தெற்கு), கவுண்டம்பாளையம், கோவை (வடக்கு)
ஏர்பல் 2-ம்- தேதி மேட்டுப்பாளையம், அவினாசி, திருப்பூர் (தெற்கு), திருப்பூர் (வடக்கு)
மார்ச் 3-ம்- தேதி கிருஷ்ணராயபுரம், குளித்தலை, முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர்
ஏப்ரல் 4-ம்- தேதி லால்குடி, திருவரங்கம், திருவரம்பூர், திருச்சி ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளேன்.
எனவே, அந்தஅந்த மாவட்ட செயலாளர்களும், வேட்பாளர்களும் அதற்கேற்ப எனது கூட்ட நிகழ்ச்சியை அமைத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications