For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.வுக்கு ஒய்.எஸ்.ஆர். தம்பி பளார்

By Siva
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக சட்டசபையில் அமைச்சர் ஒருவர் எம்.எல்.ஏ.வை தாக்கியுள்ளார்.

ஆந்திர சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ஒருவர் பேசுகையில், ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது மாநிலத்தில் ஏராளமான நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டார். அவர் ஒரு திருடன் என்று கடுமையாக விமர்சித்தார்.

உடனே அங்கிருந்த ராஜசேகர ரெட்டியின் அமைச்சர் தம்பியான விவேகானந்த ரெட்டி ஆத்திரம் தாங்காமல் தன் அண்ணனை திருடன் என்று கூறியவரை ஓங்கி கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டார்.

இதனை சற்றும் எதிர்பாராத உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

English summary
YSR's brother minister Vivekananda Reddy has slapped a TDP MLA for calling his late brother as thief. This made the members in the assembly stunned. The house was adjourned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X