செக்போஸ்டில் கொர்: 2 எஸ்ஐக்கள் மாற்றம்-எஸ்பி அதிரடி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ரோட்டில் உள்ள செக்போஸ்டில் தூங்கிய இரண்டு எஸ்.ஐ.க்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், வடபாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு எட்டயபுரம் ரோடடில் உள்ள செக்போஸ்டில் பாதுகாப்பு பணி கொடுக்கப்பட்டிருந்தது. நேற்றிரவு 2 பேரும் அயர்ந்து தூங்கி விட்டனர். நள்ளிரவில் அந்த வழியாக வந்த தூத்துக்குடி எஸ்பி செந்தில்குமார் அவர்களை எழுப்பினார். அதி்ர்ச்சியில் உறைந்த அவர்களிடம் தேர்தல் நேரத்தில் பணியை ஒழுங்காகச் செய்யாமல் தூங்கியதை கண்டித்ததோடு, 2 பேரையும் சாத்தான்குளத்திற்கு மாறுதல் செய்து உத்தரவிட்டார்.
இன்று காலை சாத்தான்குளம் டிஎஸ்பியை சந்தித்து பணி இட விபரத்தை தெரிந்து கொள்ளுமாறும் கூறினார். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications