ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் தோற்பது உறுதி: அழகிரி
Subscribe to Oneindia Tamil
மதுரை: தனது கட்சி வேட்பாளரையே தாக்கும் விஜயகாந்த் ரிஷிவந்தியத்தில் தோற்பது உறுதி என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக மற்றும் தேமுதிகவினர் நேற்று மத்திய அமைச்சர் மு.க. அழகிரி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அப்போது மு.க. அழகிரி கூறியதாவது,
தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்களிடையே ஒரு புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த எழுச்சியுடன் அவர்கள் செயல்பட்டு திமுக கூட்டணி வெற்றி பெற செய்ய வேண்டும்.
தெய்வத்துடன் கூட்டணி, மக்களுடன் கூட்டணி, நான் தான் முதல்வர் என்றெல்லாம் சொன்ன விஜயகாந்த் தற்போது கடையில் நிற்கிறார். தனது கட்சி வேட்பாளரை பிரசார கூட்டத்தில் வைத்து தாக்கும் விஜயகாந்த் ரிஷிவந்தியத்தில் தோற்பது உறுதி. கருணாநிதி தான் 6-வது முறையாக முதல்வராக ஆவார் என்றார்.












Click it and Unblock the Notifications