தந்தை நினைவு தினம்: கலிங்கப்பட்டியில் வைகோ மவுன விரதம்
சங்கரன்கோவில்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மவுன விரதம் இருந்து வருகிறார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ளார். அவரது தந்தை வையாபுரியின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இதையொட்டி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் யாருடனும் பேசாமல், உணவு உண்ணாமல் மவுன விரதம் இருந்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இருந்தால் இந்த தினத்தில் சொந்த ஊருக்கு வந்து மவுன விரதம அனுஷ்டிப்பது வைகோவி்ன் வழக்கம்.
அதேபோன்று இன்று காலை அவரது வீட்டிலுள்ள தந்தையின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மவுன விரதத்தை தொடங்கினார். மாலை 6 மணிக்கு விரதத்தை முடிக்கும் அவர் சட்டசபை தேர்தல் குறித்து ஏதேனும் வாய் திறப்பாரா என மதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications