சென்னையில் பாஜக செய்தித் தொடர்பாளருடன் ஒரு உரையாடல் நிகழ்ச்சி
சென்னை: பாஜகவின் நண்பர்கள் அமைப்பின் (http://friendsofbjp.com/) சென்னை பிரிவு சார்பில் சென்னையில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் இன்றைய நிலை என்ற தலைப்பிலான இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ரவிசங்கர் பிரசாத் கலந்து கொள்கிறார். அவருடன் பார்வையாளர்கள் உரையாடலாம்.
ஏப்ரல் 9ம் தேதி மாலை 4 மணிக்கு கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள எம்விஜே டவர்ஸில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்குமாறு பாஜக நண்பர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரண்ட்ஸ் ஆப் பாஜக எனப்படும் பாஜகவின் நண்பர்கள் அமைப்பு, தேசிய அளவிலான இயக்கமாகும். இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்களை உள்ளடக்கிய அமைப்பு இது. அவர்களுக்காக குரல் கொடுத்து வரும் இயக்கம். பாஜகவின் ஒரு துணை அமைப்பான இந்த இயக்கம், சிறந்த கட்டமைப்புடன் செயல்பட்டு வருகிறது. தனி மனித சுதந்திரம், தேசிய பாதுகாப்பு, சிறந்த வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை நிலை நிறுத்தும் வகையில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications