தேர்தல் போலீஸ் சோதனையில் ரூ.2.23 கோடி சிக்கியது-ஒரு திமுக தொண்டர் கைது
சென்னை: தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடந்த வரும் வாகன சோதனையில், நேற்று சென்னையில் இரண்டு இடங்களில் நடந்த சோதனையில் ரூ.2.23 கோடி பணம் சிக்கியது. இதில் திருவான்மியூரில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக ஒரு திமுக தொண்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஆவடி அருகே பருத்திப்பட்டு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் இருந்த போலீஸார், ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில் ரூ.2.20 கோடி பணம் கட்டுக் கட்டாக ஒரு பெரிய இரும்புப் பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து பறிமுதல் செய்தனர்.
அந்த வேனை ஓட்டி வந்த நபரின் பெயர் ராஜேஷ் குமார். அவருடன் சத்யராஜ் என்பவரும் உடன் இருந்தார். இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அசோக் நகரைச் சேர்ந்த ஒரு செக்யூரிட்டி நிறுவனத்தில் தாங்கள் பணியாற்றி வருவதாகவும், இந்தப் பணத்தை பல்வேறு ஏடிஎம் மையங்களில் செலுத்துவதற்காக கொண்டு செல்வதாகவும் கூறினர்.
மேலும் இப்பணத்தை அம்பத்தூர் எஸ்ட்டேட்டில் உள்ள ஸ்டேட் வங்கியிலிருந்து எடுத்து வருவதாகவும் கூறினர். ஆனால் பணத்தை எடுத்ததற்கான எந்தஆதாரமும் அவர்களிடம் இல்லை. மேலும் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறியபோதிலும் வேனில் எந்த செக்யூரிட்டி காவலரும் உடன் இல்லை. மேலும் வேனில் இருந்த இரட்டைக் குழல் துப்பாக்கி லைசென்ஸும் இல்லை.
இதையடுத்து அந்தப் பணத்தை அப்படியே பறிமுதல் செய்தனர் போலீஸார். உரிய ஆவணங்களைக் காட்டி பணத்தைத் திரும்பப் பெற்றுச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டது. மேலும் ஆவடி போலீஸாரும் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே திருவான்மியூரில் நடந்த இன்னொரு சோதனையில், திமுகவைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் பிடிபட்டார். இவர் ரூ. 3 லட்சத்துடன் எல்பி சாலையில் உள்ள வங்கிக்கு வந்திருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் வைத்திருந்த ஆயிரும் ரூபாய் நோட்டைக் கொடுத்து விட்டு 100 ரூபாய்க் கட்டுக்களை வாங்க வந்திருந்ததாக கூறினார்.
அவர் வைத்திருந்த பணக் கட்டுகளுடன் சோழிங்கநல்லூர் தொகுதிக்கான துண்டுப் பிரசுரங்களும் உடன் இருந்தன. அவர் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக இந்தப் பணத்தை மாற்ற வந்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பணத்தைப் பறிமுதல் செய்த போலீஸார், புருஷோத்தமனைக் கைது செய்தனர்.
-
கோலாட்டம் ஆடிய மாணவியின் வாயில் ’விசில்’.. அத்தனை பேர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி செய்த செயல்! -
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்! -
சம்பளத்துடன் விடுமுறை கட்டாயம்.. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தனியார் நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications